''கல்வியை சீர்குலைக்க தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த சொல்கிறார்கள்'' முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் பொது கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ''எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி, உங்களால் தான் நான் முதல்வர் ஆனேன். 

இது நான் நினைத்துப் பார்க்காத இடம். 2026-க்கான விழாதான் இந்த பிறந்தநாள் விழா. ஓய்வு இல்லாமல் தொடர்ந்து உழைத்து வருகிறேன். மற்ற மாநில மக்கள் வியந்து பார்க்கிற வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறோம். இதனை பா.ஜ.,வால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.''என்று குறிப்பிட்டார்.

அத்துடன், ''கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும் ஆனால், விரிசல் வராது. விரிசல் வருமென எதிர்பார்ப்புகள் இருக்கலாம். உங்கள் எண்ணத்தில் மண் விழுமே தவிற விரிசல் வராது. நம்முடைய ஒற்றுமைதான் தமிழகத்தை, சமூக நீதியை, காப்பாற்றி இருக்கிறது.'' என்று தெரிவித்தார்.

மேலும்,''கலைஞர் வழியில் நான் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து உழைத்து வருகிறேன். லோக்சபா தொகுதி குறைப்பு சம்பந்தமாக வரும் 05-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். இக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும். என்று அவர் மேலும் அறிவித்துள்ளார்.

கல்வியை சீர்குலைக்க தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த சொல்கிறார்கள். கல்விக்கான நிதியை கூட மத்திய அரசு வழங்க மறுத்து வருகிறது. பிரதமரே, இந்தியை எங்கள் மேல் திணிக்காதீர்கள். எங்களுக்கு தமிழும், ஆங்கிலமும் போதும். பிற மொழியை நாங்கள் தொழில்நுட்பங்கள் மூலம் கற்றுக்கொள்கிறோம். உங்களால் இந்தி மொழியை திணிக்க முடியாது. நம்மை அடக்குவதற்காக தொகுதி மறுசீரமைப்பை கொண்டுவந்துள்ளனர். அடக்க நினைப்பவர்களை அடங்கிப்போக வைப்பவர்கள் நாங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன், ''தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் ஏன் இதனால் பாதிக்கப்பட வேண்டும்? தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுங்கள்.'' எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக 05-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். சில கட்சிகள் இதில் கலந்து கொள்ள மறுத்துள்ளன. அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நாம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நாம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க முடியும்." என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalin says he is working tirelessly on the path kalainger


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->