ECR-ல் கோர விபத்து!...நேருக்கு நேர் கார் மோதி ஒருவர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்  மாவட்டம், கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வரும் நிலையில், இவர் தனது மருமகள் மற்றும் தனது 2 வயது பேத்தி ஆகியோருடன் கல்பாக்கம் நோக்கி காரில் சென்று  கொண்டிருந்துள்ளார்.

அப்போது வாயலூர் கிழக்கு கடற்கரை சாலை வலைவில் கட்டுப்பாட்டை இழந்த கார்  வேகமாக ஒடி, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மருமகளும், பேத்தியும் படுகாயம் அடைந்த நிலையில், இது குறித்து  தகவலறிந்த சதுரங்கபட்டினம் போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், இந்த விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horrible accident in ecr Tragedy one person died in a head on collision with a car


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->