மதுரை || மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் வளர்நகரை சேர்ந்தவர் கணேசன் (50). இவருடைய மனைவி பாண்டியம்மாள். இந்நிலையில் கணேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால், அடிக்கடி மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கணவன்-மனைவியிடையே தகராறு முற்றிய நிலையில், இதனால் மன வேதனை அடைந்த கணேசன் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று மதியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த கணேசனின் உடல்நிலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சமயநல்லூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband suicide due to family problem with wife in Madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->