#கடலூர் || குடும்ப தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் குடும்ப தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வடக்கு திட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி அருள்செல்வம்(40). இவரது மனைவி மஞ்சமாதா. இந்நிலையில் அருள் செல்வம் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியோடு தகராறு செய்து வந்துள்ளார்.

இதேபோல் நேற்று மாலை அருள் செல்வம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன வேதனை அடைந்த அருள் செல்வம் வீட்டின் முன்னால் இருந்த மற்றொரு கூரை வீட்டிற்கு சென்று அங்கு மனைவியின் சேலையால் தூக்கு போட்டுக் கொண்டுள்ளார்.

இதைப்பார்த்த குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருள் செல்வத்தை மீட்டனர். ஆனால் அருள்செல்வன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த புவனகிரி காவல்துறையினர், உயிரிழந்த அருள் செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband suicide in Cuddalore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->