வாரிசு அரசியலுக்கு பெயர் போன திமுக - போட்டு தாக்கிய ஜே.பி.நட்டா! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாட்டில் உள்ள மாநில கட்சிகள் வாரிசு அரசியலில் செய்வதாக குற்றஞ்சாட்டினார்.

அவரின் உரையில், "காங்கிரஸ் கட்சி பிரித்தாலும் சூழ்ச்சியை செய்கிறது, மற்றொருபுறம் குடும்ப அரசியல் நடத்துகிறது. ஆனால் பிரதமர் மோடி வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டு ஆட்சி செய்கிறார்.

2024ல் தமிழகத்தில் பிரதமர் மோடியின் கரங்களை தமிழக மக்கள் வலுபடுத்த வேண்டும். சட்டமன்றத்துக்கு வெளியிலும், உள்ளேயும் தமிழக மக்களின் குரலாக பாஜக உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது. தமிழகத்தில் கடின உழைப்பால் விரைவில் தாமரை மலரும். 

பல்வேறு மாநிலத்தில் குடும்ப அரசியல் நடக்கிறது. ஆனால், தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு பெயர் போனது திமுக. பாஜகவால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும்.

பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. மக்களுக்கான நேரடி ஆட்சியே பாஜகவின் ஆட்சி. பாஜக கட்சி அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்" என ஜே.பி.நட்டா பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JB Nadda Say About DMK Family politics 2023


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->