இறந்த நிலையில் தி.மு.க. பிரமுகர்: விபத்தில் உயிரிழந்தாரா.? போலீசார் விசாரணை!
Kallakurichi DMK celebrity dead police investigated
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 47) இவர் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க பிரதிநிதியாக இருந்தார்.
இவரது மனைவி உமாமகேஸ்வரி. இவர் ஊராட்சி தலைவராக உள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த பாலாஜி கடந்த 18 மாதங்களாக பணிக்கு செல்லவில்லை.
இவர் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து மயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் பாலாஜியை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![](https://img.seithipunal.com/media/CRIME 005.png)
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து விட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kallakurichi DMK celebrity dead police investigated