கேரள பயிற்சி மருத்துவர் திருவாரூர் மருத்துவமனையில் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் பசும்பாரா பகுதியை சேர்ந்த சிந்து என்பவர் திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருவத்தவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 நேற்று முதல் சிகிச்சை பெற்று வந்த பயிற்சி மருத்துவர் சிந்து இன்று காலை திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டபோது ரத்த மாதிரிகள் சென்னைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் ரத்த மாதிரி சோதனையின் முடிவு வருவதற்கு முன்பே அவர் தற்போது உயிரிழந்துள்ளார். பயிற்சி மருத்துவர் சிந்துக்கு எந்த வகையான காய்ச்சல் இருந்தது என்பது அவருடைய ரத்த மாதிரிகளின் சோதனை முடிவு வந்த பிறகு தெரியவரும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. 

மேலும் கேரளாவில் நிபா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் கேரளாவை சேர்ந்த பயிற்சி மருத்துவர் திருவாரூர் மருத்துவமனையில் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala training doctor dies in Tiruvarur govt hospital


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->