தமிழகம் முழுவதும் குறைவான மது விற்பனை! 46 ஊழியர்கள் பணியிடை நீக்கம்! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக அதிகாரிகள் தமிழகம் முழுவதும் குறைவான மது விற்பனை நடந்த டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்து, ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தொழிற் சங்கத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்.

டாஸ்மாக் பணியாளர் தொழிற்சங்கத்தினர் இதுகுறித்து கூறியது, ‘‘தமிழகத்தில் கடந்த ஆண்டை விட மது விற்பனை இந்த ஆண்டு குறைவாக நடைபெற்றதாக டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தி 46 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 86 ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பின்னர், 46 கண்காணிப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டாஸ்மாக் கடைகளில் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்களுக்கு அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர்’’ என்றனர்.

மேலும், டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை ஊழியர்களை மறைமுகமாக மிரட்டும் போக்காகும். விற்பனையை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்களை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

இத்தகைய அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Less alcohol sales across Tamil Nadu 46 employees dismissed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->