இப்படியே விடமுடியாது! கிறிஸ்தவ நிறுவனங்களை ஒழுங்குமுறை செய்ய சட்டப்பூர்வ வாரியம் ஏற்படுத்த வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!
Madras HC Division order
இந்து சமய அறநிலையத்துறை, வஃக்பு வாரியம் போல கிறிஸ்தவ நிறுவனங்களை ஒழுங்குமுறை செய்ய சட்டப்பூர்வ வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்று, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தாளாளர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சதீஷ்குமார், "கிறிஸ்தவ நிறுவனங்கள் கல்வி, மருத்துவம் போன்ற பல பொதுச்சேவைகளை மேற்கொள்கிறது என்பதை மறந்துவிட முடியாது.
அந்நிறுவனங்களின் சொத்துகள், நிதி பாதுகாக்கப்பட வேண்டும். இதை ஒழுங்கமைக்க ஒரு சட்டப்பூர்வ வாரியம் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர், தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளரை வழக்கில் இணைத்து பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.