திருச்சி || நீதிமன்றம் அருகே மீட்கப்பட்ட ஆண் சடலம் - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியில் ஜல்லிக்கட்டு சாலை உள்ளது. இங்கு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று முகம் சிதைந்து நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இறந்த உடலில் முகம் சிதைந்து இருப்பதால் அவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது விபத்தில் மரணமடைந்தாரா? என்ற விதத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற வளாகம் அருகே மர்மமான முறையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

male body rescue near trichy court


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->