தஞ்சாவூரில் சோகம் - பணியில் இருந்த ஆசிரியருக்கு கத்தி குத்து...! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி. இவர் இன்று காலையில் பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள் ஆசிரியை ரமணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஆசிரியை ரமணியை குத்திக் கொன்றதாக சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், மதன்குமார் ஆசிரியை ரமணியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், ரமணியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for attack school teacher in thanjavur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->