நெல்லை ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - கையும் களவுமாக பிடிபட்ட வாலிபர்.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே விமான நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது வாடிக்கையாகி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவினர். மோப்ப நாய் உதவியுடன் நெல்லை ரெயில் நிலையம் முழுவதும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களுடன் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக இருந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for bomb threat to nellai railway station


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->