குடியைக் கெடுத்த குடி - பெற்ற தாயை அரிவாளால் வெட்டிய மகன் - ஈரோட்டில் சோகம்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி - சாவித்ரி தம்பதியினர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே குடிப்பழக்கத்திற்கு ஆளான பழனிசாமி வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தனது தாய் பாப்பாத்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

சமீபத்தில் இருவரும் தங்களுக்கு சொந்தமான 1½ ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்துள்ளனர். அதற்காக முன்பணமாக ரூ.1 லட்சம் வாங்கி உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலையில் பழனிசாமி தனது தாய் பாப்பாத்தியிடம் விவசாய நிலம் விற்ற மீதி பணத்தை வாங்கி தன்னிடம் தரும்படி கேட்டுள்ளார். 

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தகராறு முடிரியத்தில் ஆத்திரமடைந்த பழனிசாமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தாய் பாப்பாத்தியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். மகனே பெற்ற தாயை கொலை செய்த சம்பவம் ஈரோடு அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill mother in erode


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->