ஜாமீன் கையெழுத்தால் பறிபோன உயிர் - சென்னையில் பரபரப்பு..!!
man sucide for money loss surety signature in chennai
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த ஜான் தேவராஜன் என்பவர் பெரவள்ளூரில் உள்ள பூங்காவில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், ஜான் தேவராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பருக்கு ஜாமின் கையெழுத்திட்டு ரூ.2 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், இந்தக் கடன் வாங்கிய நபர் இறந்து விட்டதால், ஜாமீன் கையெழுத்து போட்ட தேவராஜனின் வங்கிக்கணக்கில் இருந்து தவணைத் தொகை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியம், விரக்தியுமடைந்த தேவராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்புலட்சுமி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் படி போலீசார் விரைந்து வந்து தேவராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man sucide for money loss surety signature in chennai