கரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து - தாய், மகன் படுகாயம் - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகன் படுகாயமடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் தெலுங்கு பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (52). இவரது மகன் சத்யராஜ் (32). இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் தோகைமலை-மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்த தீபம் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சத்யராஜ் மற்றும் வளர்மதி பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother and son injured in motorcycle accident in karur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->