#தமிழகம் || தாயுடன் உறங்கிய சிறுமியை கத்தி முனையில் கடத்திய கும்பல்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் அருகே வீட்டின் மாடியில் தாயுடன் தூங்கி கொண்டிருந்த சிறுமியை கத்தி முனையில் கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சிறுமியை மீட்பதற்கு 6 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், காளிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த சரவணன் - கௌசல்யா தம்பதியின் 11 வயது மகள் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கத்திமுனையில் கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தாய் கௌசல்யா, சிறுமி இருவரும் வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கௌசல்யாவை கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த நகையை பறித்துக்துள்ளனர்.

பின்னர், கௌசல்யாவை வீட்டில் கட்டி போட்டுவிட்டு, சிறுமியை மட்டும் கடத்தி சென்றுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் தாயார் கௌசல்யா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளையும், சிறுமியை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் அந்த பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nammakl kalichettipatti year old child kidnaped


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->