ஒரே கிராமத்தில் 12 பேருக்கு வெறிநாய்கடி.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!  - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கேரளாவில் கடந்த மாதம் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டவர்களைக் கடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. 

இந்த தெருநாய்களுக்குப் பயந்து கேரளாவில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகச் சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சென்று பள்ளி வரை வழியனுப்பி வைத்த சம்பவமும் நடந்தது.  

இதைத்தொடர்ந்து, தமிழகத்திலும் சிறுவர்களை நாய் கடித்து அவர்களை அரசு மருத்துவமனைகளில் அனுமதிப்பது தொடர்கதையாகி வந்தது. இதனால் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை ஏற்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று ஆரணி அருகே உள்ள மேல்சீசமங்கலம் கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் சுமார் பன்னிரெண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near aarani street dogs bite in 12 peoples


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->