திருவாரூர் அருகே சோகம் - சுவர் இடிந்து விழுந்து 9 வயது சிறுமி பலி.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி வரையும் தொடரும் என்று கூறப்பட்டதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிக தீவிரம் அடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதன் காரணமாக தென்மாவட்டங்களின் உள் பகுதிகளில் பல இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் உள் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒன்பது வயது சிறுமி படுக்கை மடைந்துள்ளார். உடனே அவரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். 

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி மோனிஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மழையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒன்பது வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nine years old girl died for wall collapse in tiruvarur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->