அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்வு... ஆர். என். தனபாலன் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி தெரிவித்திருப்பதாவது,

கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் இணைந்து வழி நடத்தி வந்த எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையை ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. தொண்டர்கள் மீண்டும் அவர்களின் தலைமையின் கீழ் செயல்படவும், அவர்களின் வழிகாட்டுதலின்படி கட்சியை வளர்த்திடவும் அவர்களுக்கு பேராதரவு கொடுத்துள்ளனர் என்பது பெருமைக்குரியதாகும்.

இரட்டை தலைமை என்ற விமர்சனங்களுக்கு இடையே 1 கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் நம்பிக்கையையும், ஏகோபித்த பேராதரவையும் பெற்று மீண்டும் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக போட்டியின்றி தேர்வான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியின்றி தேர்வான எடப்பாடி கே.பழனிசாமிக்கும், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NR Dhanabalan congratulated O Panneerselvam And Edappadi Palanisamy


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->