#BREAKING | NIA-வுக்கு எதிராக NTK அவசர வழக்கு.!! பிற்பகலில் விசாரணை.!!
Ntk filled petition against nia raid in madrashc
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று காலை 6 மணி முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, தென்காசி, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/nia-rep1-1699461668-6t2re.jpg)
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதே போன்று நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக் செல்போனுக்கு இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் விசாரணைக்காக நேரில் ஆஜராக மாறு தேசிய புலனாய்வு அமைப்பினர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/ntk idumba.png)
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனைக்கு எதிராகவும், அவகாசம் வழங்காமல் வலியுறுத்தும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதோடு நீதிபதி எம்.எஸ் ரமேஷ் அமர்வின் முன்பு அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிட்டுனர்.
மேலும் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனையில் சட்ட விதிமீறல் இருப்பதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த மனுவை பிற்பகலில் விசாரணை செய்வதாக நீதிபதி எம்.எஸ் ரமேஷ் அறிவித்துள்ளார்
English Summary
Ntk filled petition against nia raid in madrashc