நாங்குநேரி சம்பவம்.! பள்ளி மாணவன் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் ஒரு சிறார் கைது.!
One more minor boy arrested in Nanguneri school student's case
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்த முனியாண்டியின் மகன் சின்னத்துரை (வயது 17) மற்றும் சந்திரா செல்வி (14) ஆகியோர் வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பும், சந்திரா செல்வி 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10:30 மணியளவில் அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அவர்களின் தாத்தா கிருஷ்ணன் (59) மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்.
அரிவாளால் வெட்டியதில் காயம் அடைந்த சின்னத்துரை மற்றும் சந்திரா செல்வி ஆகியோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சின்னத்துரையை அவருடன் பயிலும் சில மாணவர்கள் சாதி ரீதியாக தொல்லை பாகுபாடு காட்டி துன்புறுத்தியதால் மனம் உடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இது குறித்து சின்னத்துரை தனது தாயிடம் கூறியதை தொடர்ந்து அவர் ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்து உள்ளது. இதற்கு பழி வாங்கும் நோக்கில் சின்னதுரையின் வீட்டுக்குள் நுழைந்த மாணவர்கள் அவரை அரிவாளால் உடலில் பல இடங்களில் வெட்டியுள்ளனர். தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் நேற்று 6 சிறுவர்களை போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் நாங்குநேரி போலீசார் இன்று கைது நம்பி நகரை சேர்ந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் திமுக நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணுவின் சகோதரர் மகன் தான் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
English Summary
One more minor boy arrested in Nanguneri school student's case