ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இன்று முதல் ரெயில் சேவை இயக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிலும், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் ஆங்காங்கே சிறு, சிறு மண் சரிவு மற்றும் ரெயில் பாதை ஓரத்தில் அருவிகள் தோன்றின. 

மேலும், தண்டவாளத்தை மறைத்தபடி தண்ணீர் ஓடியது. இதனால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கடந்த 16 மற்றும் 17- உள்ளிட்ட இரண்டு நாட்கள் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழை அளவு குறைந்ததால், மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு இடையே இயக்கப்படும் மலை ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ooty train run from today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->