சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! போராட்டத்தில் குதித்த மக்கள்! விமானம் காலதாமதம்! - Seithipunal
Seithipunal


சென்னை : சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி நேரத்தை மாற்றியத்தால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று 1.50 க்கு இன்று அதிகாலை சென்னையில் இருந்து கிளம்பும். ஆனால் இரண்டு மணி நேர தாமதமாக விமானம் புறப்படும் என்று அறிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், 4.50 பிறகு 8.50 க்கு கிளம்பும் என்று தகவல் பலகையில் அறிவிக்கை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகளுக்கு எந்த ஒரு தகவலும் சொல்லாமல் 5 மணி என்றும் பிறகு 8.50 என்றும் தகவல் பதாகையில் மட்டும் அறிவிப்பை மாற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வயதானவர்களும் குழந்தைகளுடன் வந்தவர்களும் விமான நிலையத்தின் அதிக குளிரால் அவதிப்பட்டனர்.

தற்பொழுது அனைத்து பயணிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலைய தலைமை அதிகாரிகள் சரியான தகவலை ,பதிலை கூறாமலும் எந்த ஒரு ஏற்பாடுகளும் இல்லாமல் நீண்ட மணி நேரமாக விமான நிலையத்தில் உள்ள அனைத்து பயணிகளும் கோபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Passengers protest as flight from Chennai to Singapore is rescheduled without any prior notice


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->