மருத்துவமனைக்கு வெளியே பரிதவிக்கும் நோயாளிகள்!...வாசலுக்கு பூட்டு போட்டு மருத்துவர்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து, போடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில்,  தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜிக்கு கத்தி குத்து நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், மருத்துவமனையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று அரசு மருத்துவ சங்கங்களின்  கூட்டமைப்பினர்  அறிவித்து உள்ளனர். அந்த வகையில், மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வெளியே பூட்டு போட்டு அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக வந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும், ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளுக்கும் சிகிக்சை அளிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Patients suffering outside the hospital doctors are protesting by locking the door


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->