இன்றே கடைசி! நாளை முதல் ₹2000 தாள் பெறப்படாது! பெட்ரோல் பங்க் சங்கம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என்பதால் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அதனை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ள வேண்டும் என கடந்த மே மாதமே ரிசர்வ் வங்கி அறிவித்தது.

தற்போது வரை 90% மேற்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு இன்னும் 2 நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் இன்று மிலாடி நபி என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பெட்ரோல் பங்குகளில் 2000 ரூபாய் தாள் பெறுவது இன்றே கடைசி நாள் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று வங்கிகள் விடுமுறை என்பதால் இன்று பெறப்படும் 2000 ரூபாய் நோட்டுகள் நாளை டெபாசிட் செய்ய ஏதுவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Petrol bank announced no more rs2000 note received from tomorrow


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->