" இறப்பு எண்ணிக்கை பொய்.. பலபேருக்கு கண் போய்டுச்சு " ! அதிர்ச்சியை கிளப்பும் பாமக திலகபாமா! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயண விவகாரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை பொய் எனவும் பல பேருக்கு தற்போது கண் பார்வை பொழிவு உள்ளதாகவும் பாமக பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் நேற்று விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 38 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் ஆலோசனைப்படி, பாமக பொருளாளர் திலகபாமா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்தும் மருத்துவர்கள் சந்தித்தும் ஆய்வு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திலகபாமா பேசுகையில், கள்ளக்குறிச்சியில் இரண்டு நாட்களுக்கு முன் மூன்று நாட்களுக்கு முன் கள்ளச்சாராயத்தை குடித்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு தெரிவிக்கும் கள்ளச்சாராயை இறப்பு  எண்ணிக்கை எதுவும் உண்மை கிடையாது. பல நோயாளிகளுக்கு கண் பார்வை பறிபோகி உள்ளது. 

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சமோ 20 லட்சமும் அறிவிப்பதால் எந்தப் பயனும் இல்லை. முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk Thilakabama kallakurichi Govt Hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->