தொடர் கஞ்சா விற்பனை! 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது! - Seithipunal
Seithipunal


குடியாத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

குடியாத்தம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குடியரசன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் தாலுகா போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சிறையிலிருந்து வெளியே வந்து கஞ்சா  விற்பனையில் செய்து வந்ததாள் அவருடன் சேர்த்து  மூன்று பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

அதன் பேரில் போலீசார் காஜா, குலாப், குடியரசன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் குன்றத்த தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூன்று பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrested three people who were selling ganja in Gudiyatham area


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->