இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 2 சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது.. விருதுநகர் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள் உள்ளிட்ட ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், கரிசல்குளத்தை சேர்ந்தவர் முத்துசெல்வம். இவர் தனது காரில் விருதுநகர் சென்று விட்டு வீட்டிற்கு  திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது  அந்த வழியே சென்ற பெண்ணுக்கு லிப்ட் கொடுத்து அழைத்து வந்துள்ளார்.அந்த பெண்ணை முத்துசெல்வன் ஒரு இடத்தில இறக்கி விட்டுள்ளார். அப்போது காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று முத்துசெல்வத்தை தாக்கி விட்டு பெண்ணை கடத்தி சென்றது.

பின்னர், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன்  அவரிடம் இருந்த 5 சவரன் நகையையும் பறித்து சென்றனர். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். அவர்கள் மீது 9 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police Arrested Who gang sexually abused in Viruthunagar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->