திருநங்கைக்கு பாலியல் தொல்லை - திருவோணம் காவல் நிலைய போலீசார் பணிநீக்கம்.!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் ஆர்.வினோத். இவர் கடந்த ஆண்டு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, திருநங்கை ஒருவரின் வீட்டிற்குள் இரவில் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் படி போலீஸ்காரர் வினோத்திடம் துறை ரீதியில் விசாரணை நடந்து வந்தது. அதில், போலீஸ்காரர் வினோத் சம்பந்தப்பட்ட திருநங்கையை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தது உண்மைதான் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தற்போது திருவோணம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் ஆர்.வினோத்தை பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார். 

ஒரு திருநங்கையை பாலியல் தொந்தரவு செய்ததாக போலீஸ்காரர் வினோத் என்பவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சக போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police officer dismiss for harassment case in thanjavur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->