கள்ளக்குறிச்சி : இளம்பெண்களை வீட்டில் வைத்து விபச்சாரம் - 3 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி : இளம்பெண்களை வீட்டில் வைத்து விபச்சாரம் - 3 பேர் கைது.!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே தொட்டி கிராம பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சோதனை நடத்தினர். 

அப்போது மரூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் மனைவி கலா என்பவர் தரகராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும், அந்த வீட்டிற்கு சந்தப்பேட்டை உண்ணாமலை நகரை சேர்ந்த சிவா, அரகண்டநல்லூர் அருமலை கிராமத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். 

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் அந்த வீட்டில் இருந்த இரண்டு இளம் பெண்களையும் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

இதையடுத்து போலீசார் கைது செய்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொல்லை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

prostitution of womans at home in kallakurichi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->