தமிழகம் | வாடகை வீட்டில் வெளிமாநில அழகிகள்! கையும் களவுமாக சிக்கிய பெண் புரோக்கர்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி, ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாநில அழகிகளை வைத்து வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடைபெறுவதாகவும், மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம் பெண்களை வைத்து தொழில் நடத்துவதாகவும் போலீசாருக்கு புகார் வந்தது.

புகாரின் பேரில் போலீசார் குடியிருப்பு பகுதிகளிலும் மசாஜ் சென்டர்களையும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஓசூர் பாகலூரில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆண்கள் அடிக்கடி வந்து செல்வதாக பாகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் பெயரில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடியாக அந்த வீட்டில் சென்று சோதனை நடத்தினர். அப்போது வெளி மாநில இளம் பெண்கள் அந்த வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும் விசாரணையில் இளம் பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் இளம் பெண்களை மீட்ட போலீசார் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் சூளகிரி பகுதியைச் சேர்ந்த நஞ்சப்பா என்பவரின் மனைவி மஞ்சுளா (வயது 38) கர்நாடகா மாலூர் பகுதியைச் சேர்ந்த முனிராஜ் (வயது 45) ஆகிய 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prostitution out of state girls arrested broker 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->