#தமிழகம் | நீதிமன்றம் வந்த ரௌடி இளவரசன் வெட்டிப் படுகொலை! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் அருகேயே ரௌடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி திரும்பிச் சென்றபோது ரௌடி இளவரசன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்தவர் இளவரசன். இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. மேலும், ரௌடியாக வலம்வந்த இளவரசன், இந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுக்காக கையெழுத்திட வந்திருந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று ரௌடி இளவரசனை வெட்டிப் படுகொலை செய்தது. இந்த சம்பவம் சரியாக புதுக்கோட்டை புதுக்குளம் அருகே நடந்துள்ளது.

கணேஷ்நகர் போலீஸார் இளவரசனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு எடுத்து சென்றனர்.

மேலும், இளவரசனை கொலை செய்த மர்ம கும்பைலை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Crime rowdy killed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->