#BigBreaking | புதுக்கோட்டை அருகே வெடித்து சிதறிய பட்டாசு குடோன் - உடல் சிதறி பலியான உயிர்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள அத்திப்பள்ளம் என்ற பகுதியில், வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் சற்று முன்பு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் கார்த்திக் என்ற இளைஞர் உயிரிழந்து உள்ளதாகவும், மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயம்பட்ட ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்படுவதற்கான காரணம் குறித்து வெளியான தகவலின் படி, இந்த பட்டாசு குடோனை விரைவுப்படுத்துவதற்காக பணிகள் நடந்துள்ளது. 

அப்போது வெல்டிங் வைத்த போது ஏற்பட்ட தீ பொறி பட்டாசு குடோனில் பட்டு, உள்ளே இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளன.

இந்த விபத்தில் கார்த்திக் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையின் விசாரணையில் விபத்து நடந்த இந்த பட்டாசு ஆலை உரிய அனுமதி உடனே செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pudukottai viralimalai athipallam fire accident


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->