மதிப்பெண் குறைந்ததால் விரக்தி... பிளஸ் 2 மாணவி விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம், வைரவன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மகள் சவுமியா என்கின்ற கிஷோர்னி (வயது 17). இவர் வண்ணாங் குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். 

தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மாணவி சவுமியா, எதிர்பாராத மதிப்பேன் கிடைக்காததால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். 

இதனால் சவுமியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் தேர்ச்சி அடைந்தும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram plus 2 student commits suicide


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->