வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ராமேஸ்வர மீனவர்கள் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து முந்நூறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். அதன் படி அவர்கள், நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக கூறி தமிழக விசைப்படகு ஒன்றை பறிமுதல் செய்தனர். 

மேலும்,  அந்த படகில் இருந்த எட்டு மீனவர்களையும் கைது செய்து இலங்கை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

அதாவது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், படகு கடலில் மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவும், மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களை ராமேசுவரம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rameshwaram fishermans strike


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->