அனைத்துக் கட்சிகளிலும் ரௌடிகள் - செல்வப் பெருந்தகை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அனைவரையும் விமர்சனம் செய்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார். 

இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து செல்வப் பெருந்தகை தெரிவித்ததாவது,

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சிறை தண்டனை பெற்றவர் என அண்ணாமலை விமர்சனம் செய்கிறார்.

நீத்தார் பெருமை என்று திருவள்ளூவர் கூறினார். அதாவது, ஒருவர் உயிரிழந்து விட்டால் அவரது பெருமை பேச வேண்டும் என்று திருவள்ளூவர் எழுதி வைத்துள்ளார்.

ஆனால் உயிரிழந்தவர்களை சிறுமைப்படுத்துகிறது ஒரே கட்சி பாஜக தான்.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அனைத்து அரசியல் கட்சிகளிலும் ரவுடிகளை சேர்த்துக் கொண்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாக்க முடியும். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றால் உளவுத்துறையை வலுப்படுத்த வேண்டும்" செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selva perunthagai say about Tamilnadu political party rowdy


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->