செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!! - Seithipunal
Seithipunal


போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி சோதனை நடைபெற்றது. மேலும், அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு ஜூன் மாதம் 14ம் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்டார். 

அதன் படி, சுமார் ஐந்து மாத காலம் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்தது.

இதற்கிடையே, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்திலும் அவர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். ஆனால், உயர்நீதிமன்றமும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இதனால், செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு, அவசர வழக்காக விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதனை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthil balaji bail plea hearing in supreme court


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->