பூந்தமல்லி சிறையில் அதிர்ச்சி சம்பவம்!...கைதி விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு ரத யாத்திரை நடைபெற்றது. அப்போது, அத்வானி சென்ற பகுதியில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் ஜாகீர் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டதை  அடுத்து அவர் பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இருந்த போதிலும், உரிய ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்காத காரணத்தினால் அவரால் சிறையில் இருந்து வெளியே செல்ல முடியவில்லை. 

இதனால் விரக்தியடைந்த ஜாகீர் உசேன் சிறையில் எறும்பு மருந்தினை  சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜாகீர் உசேனை மீட்ட போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததை  தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சென்னை பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் கைதி ஒருவர் எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking incident in Poonamalle Jail Prisoner tragic end


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->