தேனியில் அதிர்ச்சி சம்பவம்!...சிறுமியை சீண்டிய பூசாரி போக்சோவில் கைது! - Seithipunal
Seithipunal


தேனி அருகே கோவில் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு, அந்த கோவிலின் பூசாரி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின்கீழ் பல்வேறு கோவில் இயங்கி வரும் நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலும் இதில் இன்று.

இந்த நிலையில், இந்த கோவில் அருகே அண்ணன், தங்கை இருவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கோவிலின் பூசாரி திலகர், சிறுமியை கோவிலில் உள்ள தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் கோவில் முன்பு உறவினர்கள் மற்றும் ஊர்பொதுமக்களுடன் திரண்டனர்.

பின்னர் கூட்டத்தை கண்டு பயந்த பூசாரி, கோவிலை பூட்டிக் கொண்டு உள்ளே ஒளிந்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பெரியகுளம் வடகரை போலீசார், கோவிலுக்குள் ஒளிந்திருந்த பூசாரியை வெளியே அழைத்து வந்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking incident in theni priest who molested girl arrested in pocso


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->