கஞ்சா போதையில் தகராறு செய்த தந்தை.. மகன் செய்த விபரீத செயல்..!
Son Killed His Father In Dindugal
கஞ்சா போதையில் தகராறு செய்த தந்தை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், டி.அயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன்(63). இவரது மனைவி பாக்கியம். நந்தினி, சரவணகுமார், சிவா என மூன்று குழந்தைகள் உள்ளனர். நத்தினி திருமணமாகி சென்றுவிடவே சரவணகுமார், சிவா ஆகியோருடன் காளியப்பன் அவரது மனைவியும் ஒரே வீட்டில் வசித்து வந்துவந்தனர்.காளியப்பன் அடிக்கடி கஞ்சா போதையில் தகராறு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சம்பவதன்று, கஞ்சா போதையில் வீட்டில் தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார். மேலும், மனைவி மற்றும் மகன்களை ஆபாசமாக பேசி தாக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் சரவணக்குமார் வீட்டில் இருந்த கத்தியால் தந்தை காளியப்பன் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Son Killed His Father In Dindugal