தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாலை முதல்வர் அறிவிக்கிறார்!
Tamilnadu Rain School College Leave Announce CM Stalin
சென்னை எழிலகத்தில் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,
"சென்னையில் மொத்தம் எட்டு இடங்களில் தற்போது மரம் முறிந்து விழுந்து உள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஒரு மணி நேரம் மழை நின்றால் கணேசபுரம், பெரம்பூர் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்படும்.
நாளை, நாளை மறுநாள் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதுகுறித்து இன்று மாலைக்குள் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tamilnadu Rain School College Leave Announce CM Stalin