மதியம் 1 மணிவரை மக்களே உஷார்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் ஒரு மணி வரை தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 16 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் என்று தமிழகத்தில் திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Heavy Rain Alert Chennai Rain Alert 2024 oct 15


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->