கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்.! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் ராமேசுவரத்திலிருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.

அங்கு கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மூன்று ரோந்து கப்பலில் வந்து ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்துள்ளனர்.

அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக விரித்திருந்த வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.கடலில் இலங்கை கடற்படை விரட்டியடித்ததனால், நேற்று காலை குறைந்த அளவிலான மீன்களுடன் மீனவர்கள் கரைக்கு வந்தனர்.

மேலும், இலங்கை கடற்படை மீனவர்களை விரட்டியடித்த சம்பவம் தொடர்பாக மீனவர்கள் யாரும் மீன்துறை அலுவலகத்தில் எந்தவிதமான புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lanka Navy chased away tamilnadu fishermans in katchathivu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->