செந்தில்பாலாஜி வழக்கு | உயர்நீதிமன்றதிற்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பில், ஒரு நீதிபதி செந்தில் பாலாஜியை விடுதலை செய்தும், மற்றொரு நீதிபதி "மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு"வை தள்ளுபடி செய்தும் தீர்ப்பு வழங்கி இருந்தனர்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பாக  வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதியிடம் வழக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் பிறபித்த உத்தரவை  எதிர்த்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு விரைவாக அனுப்ப வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியை நியமித்து, உயர் நீதிமன்றம் விரைவாக வழக்கை விசாரி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

ஒரு வாரத்திற்குள் மூன்றாவது நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்துள்ளது. வழக்கை மெரிட் அடிப்படையில் (முதன்மையான வழக்காக) விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

செந்தில்பாலாஜி தொடர்பான அமலாக்கத்துறையின் இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வருகின்ற ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court Order to Chennai HC For Senthilbalaji ED case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->