தொடரும் கொலைகள்! வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவரை வம்பிழுத்து வெட்டி கொலை செய்த கும்பல்! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் அடைக்கபட்டினம் அடுத்த வட்டாலூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் கடல் மணி. இவரது மகன் பார்த்திபன். இவர் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் லோடு ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஊருக்கு அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் கச்சேரியை பார்த்துக்கொண்டு பார்த்திபன் அருகில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள்  பார்த்திபனிடம் தகராறு ஈடுபட்டு உள்ளனர்.

வாய் தகராறு முற்றியதில் அந்த கும்பல் பார்த்திபனை அறிவாளால் சரமாரியாக வெட்டிகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் வழியாக சென்ற மக்கள் இது தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபனின் உறவினரான பாஸ்கர் என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஸ்கரன்தான் பார்த்திபனை கொலை செய்தார் என்று சரணடைந்த நிலையில் அவரது தாயார் செல்வி ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கொலை செய்யப்பட்ட பார்த்திபன் மீது பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில்  15 க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teenager was hacked to death near Pavoorchatram in Tenkasi district


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->