ஈரோடு இடைத் தேர்தல் - பரப்புரையைத் தொடங்கிய திமுக.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து  வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 2021 முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆளும் தி.மு.க.வே களத்தில் நிற்கிறது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையை தி.மு.க. இன்று தொடங்கி உள்ளது. இதன்படி பெரியார் நகரில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmk election campaighn in erode for by election


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->