'அஜித் வாழ்க, விஜய் வாழ்க' என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகின்றீர்கள்..? அஜித்குமார் பேட்டி..! - Seithipunal
Seithipunal


அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? என அஜித் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடிகர் அஜித் குமார் தற்போது துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் (Dubai 24H Race) பங்கேற்றார். இந்த தொடரில் அஜித்தின் அணியான பாஸ் கோட்டனின், ரேசிங் 991 பிரிவில் 03-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் மற்றும் அவரது அணியினருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கார் பந்தயத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் பேட்டி அளித்தார். அதில், அவர் கூறியதாவது,

அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழப் போகின்றீர்கள்? உங்கள் அனைவரின் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

ஆனால், ரசிகர்கள் அனைவரும் முதலில் உங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக இருக்கிறேன். அதேபோல என்னுடைய ரசிகர்களும் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி சிறப்பாக இருக்க வேண்டும். என்று அஜித்குமார் அவரது பேட்டியில் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajith Kumar Interview


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->