திருப்பூர் : 12 வயது மகளுக்கு பாலியல் கொடுமை.! தந்தைக்கு வாழ்நாள் சிறை..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் 12 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் கொடுமை செய்து வந்த தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் 59 வயது கூலித்தொழிலாளி. இவர் தனது 12 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் மகளை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி இது குறித்து பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கூலித்தொழிலாளியை கைது செய்தனர். இதையடுத்து இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தொடர்ந்து மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த கூலித்தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 2.50 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The father who sexually assaulted his 12 year old daughter was jailed for life in Tiruppur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->