அடுத்த சோகம்!...யானை மிதித்ததில் கணவர் உயிரிழப்பு!...துக்கத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் அடுத்த குத்தியாலத்தூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாறன்.
இவரது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் இவர் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளார். இந்த நிலையில்,
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் மாறனின் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்துள்ளது.

இதனால் விவசாயி மாறன் சோளக்காட்டில் காவலாளியாக இருந்து வந்த நிலையில், இரவு  நேரத்தில் சோளக்காட்டில் வழக்கம் போல் காவலுக்காக படுத்திருந்தார். அப்போது தோட்டத்திற்குள் புகுந்த ஒரு காட்டு யானை பயிர்களை நாசம் செய்தது.

இதனைக் கண்டு  அதிர்ச்சி அடைந்த மாறன் அங்கிருந்து தப்பி வெளியேற முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை தும்பிக்கையால்  தூக்கி கீழே போட்டு காலால் மிதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாறன்  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த நிலையில், கணவன் உயிரிழந்த நிகழ்வு தாங்க முடியாமல் சோகத்தில் இருந்த அவரது மனைவி சன்மாதி, வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, அவர்  உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The next tragedy husband dies after being trampled by an elephant grieving wife brutality


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->