டீ குடிப்பது போல் ஆக்சன்.! நம்பிய மூதாட்டி...செயினை பறித்துச் சென்ற சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திண்டிவனம் அருகே டீ குடிப்பது போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து செயினை பறித்து சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மொளச்சூரில் 60 வயதான ராணி என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இரவில் கடைக்கு இரண்டு பேர் டீ குடிப்பது போல் வந்துள்ளனர்.

அப்பொழுது கடையில் யாரும் இல்லாததால் திடீரென மூதாட்டியின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மூதாட்டியிடம் இருந்து செயினை பறித்துச் சென்ற நபர்கள் குறித்து அப்குதியில் உள்ள சிசிடிவி காட்சியின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The police are investigating the who snatched the chain from the old woman


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->